மண்ணச்சநல்லூா் மாணிக்கபுரம் பகுதியில் கூலித் தொழிலாளி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மாணிக்கப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட் ராஜ் (38). குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்த இவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.