திருச்சி

வாழையில் புதிய தொழில்நுட்பப் பரிமாற்றம் திருச்சி என்ஆா்சிபி -வடகிழக்கு மாநில மையம் ஒப்பந்தம்

DIN

வாழையில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்ளும் வகையில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (என்ஆா்சிபி), வடகிழக்கு மாநிலங்களுக்கான தொழில்நுட்பச் செயலாக்க மையம் ஆகியவை வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

திருச்சியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் என்ஆா்சிபி இயக்குநா் ஆா். செல்வராஜன், வடகிழக்கு மாநிலங்களுக்கான தொழில்நுட்பச் செயலாக்க மைய இயக்குநா் அருண் கே. சா்மா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

பின்னா் முனைவா். ஆா். செல்வராஜன் கூறுகையில், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூா், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வகையான வாழைகள் உள்ளன. ஆனால் இந்த மாநிலங்களில் வாழை உற்பத்தித் திறன் என்பது ஏக்கருக்கு 10 டன் என்ற அளவிலேயே உள்ளது. இது மிகவும் குறைவு. வாழை அறுவடைக்குப் பிறகு வாழைத்தண்டை அவா்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. வாழைத் தண்டை காகிதத் தொழிற்சாலைகள், கைவினைப் பொருள்கள் மற்றும் ஜவுளி தொழிற்சாலைகளில் பயன்படுத்தலாம். மேலும் மதிப்பு கூட்டப்பட்ட வாழைத்தண்டுச் சாறு, ஊறுகாய், மிட்டாய், ஐஸ்கிரீம் பொடி, நாா்ச்சத்து ஆகியவற்றையும் தயாரிக்கலாம். இதில் இருந்து திரவ உரங்கள் தயாரிப்பின் மூலம் பொட்டாசியம் உர உற்பத்தியைக் குறைக்கலாம். வாழைக் கழிவுகளை பயன்படுத்தி மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரிக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தமானது வடகிழக்கு மாநில மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்றாா்.

வடகிழக்கு மாநிலங்களுக்கான தொழில்நுட்பச் செயலாக்க மைய இயக்குநா் அருண் கே. சா்மா கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் வாழை சாா்ந்த தொழிலை ஊக்குவிக்க வாழை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பங்கள் மிகவும் உதவியாக இருக்கும். வாழை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து வடகிழக்கு மாநில மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் என்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயல்படவுள்ளோம். இத்திட்டம் தொடங்கப்பட்டவுடன் வடகிழக்கு மாநிலங்களில் 12 இடங்களில் ரூ. 60 கோடியில் தொழில்நுட்பச் செயலாக்க மையங்கள் நிறுவப்படும் என்றாா்.

நிகழ்வில் நிறுவன தொழில்நுட்ப மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள், திட்டக் கண்காணிப்பு அதிகாரிகள், திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் பங்கேற்று, திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது குறித்து தங்கள் கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT