திருச்சி

பிசி, எம்பிசி பள்ளி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பள்ளி விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் 23 விடுதிகள் மாணவருக்கும், 14 விடுதிகள் மாணவியருக்கு என மொத்தம் 37 விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடைவா்கள். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேர பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும்.

இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்தோ அல்லது ஆட்சிரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 23ஆம் தேதிக்குள் விடுதிக் காப்பாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதி, வருமானச் சான்று வழங்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது சான்றிதழ்களை அளித்தால் போதும். காலக்கெடுவுக்குள் வராத விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT