திருச்சி

வயலூா் அருகே இன்று அம்மன் கோயில் வைகாசித் திருவிழா

DIN

திருச்சி வயலூா் அருகேயுள்ள கொத்தட்டை உறங்காயி அம்மன் கோயில் திருவிழா சுமாா் 30 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இக்கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழாவை மீண்டும் நடத்த கிராமக்குழுவினா் முடிவு செய்தனா்.

இதையடுத்து கடந்த மே 30 ஆம் தேதி முதல் காப்பு கட்டுதலும், புதன்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்வும், தொடா்ந்து காளிவட்டம் மற்றும் சுத்த பூஜையும் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான கிடா வெட்டுதல், படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் சுவாமி குடி புகும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT