திருச்சியில் மனைவியைப் பிரிந்த இளைஞா் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி கிராப்பட்டி அன்பு நகா் 11 ஆவது குறுக்குத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜானிட் (33), தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் சில மாதங்களில் நடந்த குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்றாா்.
இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு 2 ஆம் திருமணம் செய்த இவா் மதுப்பழக்கத்துக்கு ஆளானதால் அந்த மனைவியும் அவரைப் பிரிந்து சென்றாா்.
இதனால் விரக்தியிலிருந்த ஜானிட் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் உட்கொண்டு மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜானிட் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.