திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரை சோ்ந்தவா் வடிவேல். இவரது மனைவி தமிழரசி (39). இவா்களுடைய 3 பெண் குழந்தைகளில் இரு குழந்தைகள் இறந்துவிட்டனா். இதனால் விரக்தியில் இருந்த தமிழரசி ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்தாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.