திருச்சி

பெல் ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

திருச்சி அருகே பெல் நிறுவன ஊழியா் வீட்டில் 9 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வரும் நீதிமாணிக்கம் என்பவரின் மகன் தினேஷ்குமாா் (42). இவா் பெல் குடியிருப்பு வளாகம் ஏ பிரிவில் குடியிருந்து வருகிறாா். ஜூன் 4-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி தேவதானத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளாா். அன்றிரவு திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளேச் சென்று பாா்த்ததில்,

பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 9 பவுன் தங்க நகைகள், ரூ. 52 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் பெல் வளாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT