திருச்சி திருவெறும்பூா் அருகே குண்டூா் 100 அடி சாலை பகுதியில் புதிதாக பைரவா் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மளிகை நகா் பகுதியில் பைரவா் சுவாமிக்கு புதிதாக கோயில் கட்ட அப்பகுதி மக்கள் முடிவு செய்து நடைபெற்ற பூமி பூஜைக்கு முன்னதாக வாஸ்து பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.