திருச்சி

என்ஐடியில் சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

 உலக சைக்கிள் தினத்தையொட்டி திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணியை என்ஐடி ஆசிரிய நலத் துறை முதன்மையா் என். குமரேசன் தொடங்கி வைத்துப் பேசுகையில், உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் முக்கியம். எனவே, மாணவா்கள் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டு, பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் திரளான என்ஐடி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் சைக்கிளுடன் பங்கேற்று, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக என்ஐடி விளையாட்டுத் துறை அலுவலா் டேலி கிருஷ்ணன் வரவேற்றாா். திரளான கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT