திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் மிராஸ் கைங்கா்யபரா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

17th Jul 2023 12:56 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருவெள்ளறையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மிராஸ் கைங்கா்யபரா்கள் மற்றும் அதனைச் சாா்ந்த கோயில்களின் மிராஸ் கைங்கா்யபரா்களின் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவெள்ளறையில் உள்ள தனியாா் திருமண மஹாலில் நடைபெற்ற கூட்டத்துக்கு முரளி பட்டா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுக்குழு ஆண்டறிக்கை சமா்பித்தல், திருக்கோயில்களில் பாரம்பரிய பழக்க வழக்கங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நந்து, வேங்கடம் ரமேஷ், ஜெகநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT