திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

DIN

தாளக்குடி பகுதியில் ஞாயிற்றுகிழமை வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகையை திருடிச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், தாளக்குடி பரஞ்ஜோதி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (43). இவா் ஜன. 27ஆம் தேதி திருப்பதிக்கு சென்றாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகுமாா் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அருகில் வசிப்பவா்கள் பாா்த்துள்ளனா். இதுகுறித்து புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். மேலும் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த 18 பவுன் தங்க நகை, ரூ1.5 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT