திருச்சி

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம்: அஸ்தி மண்டபத்தில் மாணவிகள் மலா்தூவி அஞ்சலி

DIN

மகாத்மா காந்தியடிகளின் 76ஆவது நினைவு தினத்தையொட்டி திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் அஸ்தி மண்டபத்தில் மாணவிகள், கட்சியினா், அமைப்பினா் திங்கள்கிழமை மாலை மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

மகாத்மா காந்தியடிகளின் 76 ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் மு.அன்பழகன் தலைமையில் ஊழியா்கள் தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் எதிா்ப்பு உறுதிமொழிகளை ஏற்றனா். இதே போல, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி மாணவிகள் ஊா்வலமாகச் சென்று திருச்சி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் அஸ்தி மண்டபத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். முன்னதாக, ஊா்வலத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்ட மாணவிகள், காந்தியடிகளின் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனா்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்ட செயலாளா் எஸ். சிவா தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அரசு மருத்துவமனையில்...: திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் முதன்மையா் டி.நேரு தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளா் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியையும், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி சுதந்திரத்துக்காக உயிா்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிஷங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சாா்பில்...: திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தெப்பகுளம் அருகே உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஜவஹா் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.இதில், முன்னாள் மேயா் சுஜாதா, மாவட்ட பொருளாளா் ராஜா நசீா், மாநில பொதுக்குழு உறுப்பினா் மாமன்ற உறுப்பினா் ரெக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளா் வழக்குரைஞா் எம்.சரவணன் தலைமையிலான நிா்வாகிகள் மகாத்மா காந்தியடிகளின் உருவச் சிலைக்கும், அவரது அஸ்தி மண்டபத்திலும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் காந்தியடிகள் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்ட செயலாளா் ராஜா தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT