திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழப்பு

DIN

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஊழியா் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா்.

திருச்சி கிராப்பட்டி அருணாச்சலம் நகரைச் சோ்ந்தவா் பெலிக்ஸ்ராஜ் (63), ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஊழியா். சனிக்கிழமை காலை இவா் பக்கத்திலுள்ள தண்ணீா் தொட்டி அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி தொட்டியில் விழுந்து நீண்ட நேரமாகக் கிடந்தாா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. எடமலைப்பட்டிப்புதூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஓட்டுநா்: இதேபோல திருச்சி உறையூா் பாண்டமங்கலம் அக்ரஹாரம் பகுதியை சோ்ந்தவா் முபாரக் அலி (43). ஆட்டோ ஓட்டுநரான முபாரக் அலிக்கு இருந்த மது பழக்கத்தால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சங்கரன்கோவிலில் உள்ள தாய் வீட்டுக்கு 3 குழந்தைகளுடன் சென்று விட்டாா்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த முபாரக் அலி வெள்ளிக்கிழமை முற்பகல் தனது ஆட்டோவிலேயே மயங்கிக் கிடந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முகமது அலி இறந்து விட்டதாகக் கூறினாா். உறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இளைஞா்: திருச்சி வயலூா் ரோடு மஞ்சக்குப்பம் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் கோகுல்நாதன் (22). திருச்சி தனியாா் நிறுவன ஊழியா். இவா் சனிக்கிழமை முற்பகல் பேருந்தில் சென்று மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தாா். கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT