சிறியில் ஸ்டாலின் கராத்தே சங்கம் மற்றும் முசிறி கராத்தே புடோகான் டோஜோ சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பரிசுகள் பெற்ற வீரா் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முசிறி புடோகன் டோஜோ சங்கத்தை சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கட்டா,சண்டை மற்றும் குழு கட்டா போட்டிகளில் 30 தங்கப் பதக்கமும், 25 வெள்ளி பதக்கமும், 5 வெண்கல பதக்கமும் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பையும் கைப்பற்றினா்.
விழாவில் முசிறி காவல் ஆய்வாளா் கோமதி தலைமை வகித்து கராத்தே நடராஜன் முன்னிலையில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.