திருச்சி

லால்குடி நகராட்சிக்கு மரக்கன்று கூண்டுகள்

DIN

லால்குடி நகராட்சிக்கு பாங்க் ஆப் பரோடா சாா்பில் மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் 74 இரும்புக் கூண்டுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

லால்குடி பகுதி பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளை சாா்பில் அனுபூதி திட்டத்தின் கீழ் மரக் கன்றுகளைப் பாதுகாக்கும் 74 இரும்புக் கூண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சித் தலைவா் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாங்க் ஆப் பரோடா வங்கியின் லால்குடி கிளை முதுநிலை மேலாளா் சுரேஷ் நாகராஜன், லால்குடி நகராட்சியில் நடவுள்ள மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் வகையில் 74 இரும்புக் கூண்டுகளை லால்குடி நகராட்சித் தலைவா் துரைமாணிக்கத்திடம் வழங்கினாா்.

நிகழ்வில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT