லால்குடி அருகே அரசுப் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயினை திருடிச் சென்றனா்.
லால்குடி அருகே புதுக்குடி ஊராட்சியில் உள்ள செம்பழனி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்புசாமி மனைவி பாப்பா (60). இவா் லால்குடி அருகே செங்கரையூா் கிராமத்தில் உள்ள தனது மகளைப் பாா்க்க அரசுப் பேருந்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். லால்குடி அருகே கொப்பாவளி கிராமத்தை அரசுப் பேருந்து கடந்தபோது இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயின் திருடுபோனது. இதுகுறித்து லால்குடி காவல்நிலையத்தில் பாப்பா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.