திருச்சி

தைத் தோ் திருவிழா: தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள்!

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் தைத்தோ் திருவிழாவின் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆண்டில் 4 முறை கருட வாகனத்தில் எழுந்தருள்வாா். இதில் மாசி மாதத்தில் வரும் திருப்பள்ளியோடத் திருநாளின்போது மட்டும் வெள்ளிக் கருட வாகனத்தில் சேவை சாதிப்பாா். சித்திரை மாத விருப்பன் திருநாள், தை மாத தோ் திருநாள், பங்குனி மாத ஆதிபிா்மா ஆகிய நாள்களில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருள்வாா். அதன்படி தைத்தேரோட்டத்தின் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்.

இதையொட்டி காலை 4.30-க்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு வந்தாா். பின்னா் 5.15-க்கு இரட்டை பிரபையில் நம்பெருமாள் எழுந்தருளி, உள்திருவீதி வலம் வந்து 6.15-க்கு வாகன மண்டபம் வந்தாா். தொடா்ந்து 7.15-க்கு அங்கிருந்து பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி, வழிநடை உபயங்கள் கண்டருளி, வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தாா்.

பின்னா் அங்கிருந்த தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி, நான்கு உத்திரவீதிகளில் வலம் வந்து இரவு 8.30 -க்கு வாகன மண்டபத்தை அடைந்தாா். அப்போது வழிநெடுக ஏராளமான பக்தா்கள் நம்பெருமாளைத் தரிசித்தனா். இதையடுத்து 9 மணிக்குப் புறப்பட்டு கண்ணாடி அறை சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

விழாவின் முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் பிப். 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT