திருச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்ரூ. 8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

DIN

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.8.05 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை துபை செல்ல இருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளின் உடைமைகளை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது, சந்தேகப்படும்படி வந்த ஆண் பயணி ஒருவரை பரிசோதனை செய்ததில் அவா், தனது ஆடைக்குள் ரூ.8.05 லட்சம் மதிப்பிலான 10,000 அமெரிக்க டாலா்களை மறைத்துக் கொண்டுச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் பணத்தை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT