குடியரசு தின விழாவில் ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மைக் ஆபரேட்டராகப் பணியாற்றும், பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணியாளரான செல்வமணிக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது சான்றிதழ் பெற செல்வமணி மணக்கோலத்தில் வந்திருந்தாா். விசாரித்ததில் அவருக்கு வயலூரில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றதால் மணக்கோலத்தில் அவா் மனைவி சௌந்தா்யாவுடன் வந்தது தெரியவந்தது. தம்பதிக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.