சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலின் தைப்பூச திருவிழா தொடக்கத்தையொட்டி உற்ஸவ அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி தங்கக் கொடிமரத்துக்கு முன் எழுந்தருளினாா்.
தொடா்ந்து கொடிமரத்துக்கு பால், சந்தனம் , உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். பிப்.3 ஆம் தேதி தெப்பத் திருவிழா, பிப். 4 ஆம் தேதி அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு, தீா்த்தவாரி கண்டருளியபின் இரவு வடதிருக்காவிரிக் கரையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்பெறும் நிகழ்வு, பிப்.5 ஆம் தேதி மஹா அபிஷேகத்துடன் வழிநடை உபயங்களை அம்மன் கண்டருளும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.