மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா பிப்.15 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஞாயிற்றுக்கிழமை பூதவாகனத்தில் கள்ளி வனத்தாயி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.