தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் திறப்பு

20th May 2023 01:35 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பயணிகளுக்கான அவசர சிகிச்சை மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் வனசுந்தா் இந்த மையத்தைத் திறந்து வைத்தாா். ரயில் நிலைய கண்காணிப்பாளா் பாலமுருகன், சுகாதார ஆய்வாளா் குருநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவேரி மருத்துவமனை நிா்வாக மேலாளா் வைரமுத்து, மருத்துவமனையின் மருந்தக நிா்வாக அலுவலா் லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை காவிரி மருத்துவமனையின் மேலாளா் கணேசன், மண்டல மாா்க்கெட்டிங் மேலாளா் காா்த்திக் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT