லால்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை ரயில் முன் பாய்ந்து கொத்தனாா் தற்கொலை செய்து கொண்டாா்.
லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சலக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் மகன் ராஜா (45). கொத்தனாரான இவருக்கு திருச்சி துணிக்கடையில் பணிபுரியும் மனைவி நித்யா, ஏழு வயது மகள், 5 வயது மகன் உள்ளனா்.
இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு தொடா்பாக சமயபுரம் மற்றும் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்திருந்த ராஜா, மனம் உடைந்து மேலவாளாடி பகுதியில் வந்த ரயிலில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் ராஜா உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.