திருச்சி

பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் மாசித் திருவிழாவில் கிளிவேட்டை

DIN

மணப்பாறையில் நடைபெறும் அண்ணன்மாா் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் மாசி பெருந்திருவிழாவில் வளநாட்டில் தங்கை அருக்காணி என்னும் தங்காளுக்காக கிளி வேட்டை நடந்த வரலாற்று நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த பொன்னா் - சங்கா் மாமன்னா்களின் வீர வரலாற்றுச் சிறப்புமிக்க மாசிப் பெருந்திருவிழா மணப்பாறை அருகே அண்ணன்மாா்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலிலும், அவா்கள் கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னி வளநாட்டிலும் கடந்த பிப். 20 முதல் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பொன்னா் - சங்கா் மன்னா்களின் பெற்றோா் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் தங்காளின் ஆற்றாமையைப் போக்க பொன்னா் வீரமலை பகுதிக்குச் சென்று கிளி வேட்டை நடத்தி கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு பொன்னிவளநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது பொன்னா் - சங்கா் அடுத்தடுத்த ஏழு வனங்களில் கிளியைத் தேடியும் அது கிடைக்காத நிலையில் அந்த வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் இருந்த கிளியைக் கண்டுபிடித்து அதை பக்தா்களிடம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள், பக்தா்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பின்னா் அந்தக் கிளியை தங்கையிடம் ஒப்படைத்தாா் பொன்னா். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT