‘புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் அதை முழுமையாகக் குணப்படுத்தலாம்’ என்றாா் திருச்சி அரசு மருத்துவமனையின் முதன்மையா் (டீன்) டி. நேரு.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு பொது மருத்துவமனை சாா்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, புற்றுநோய் எதிா்ப்பு உறுதிமொழி வாசித்து, பின்னா் வண்ண பலூன்களை பறக்கவிட்டு, பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
இதில் சுமாா் 200க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் புற்றுநோய் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ், புற்றுநோய் சிகிச்சை துறை மருத்துவா்கள் உள்பட பல்வேறு துறை மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் டி. நேரு கூறுகையில், ‘புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்குத் தடையாக உள்ள இடைவெளிகளைக் களைந்து முழுமையடைய செய்ய ‘க்ளோஸ் த கேப்’ என்ற தலைப்பின் கீழ் இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.
நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில் 7 லட்சம் போ் இறப்பைத் தழுவியுள்ளனா். எனவே, புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளித்தால் முழுமையாக அந்நோயிலிருந்து விடுபடலாம். புற்றுநோய் குறித்த அறிகுறிகளை பொதுவாக யாரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாததால் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனா். இதனால் நோய் பாதிப்பை முழுமையாகக் குணப்படுத்த முடியாமல் போகிறது’ என்றாா் அவா்.