திருச்சி

வழிப்பறி செய்து தப்ப முயன்று விபத்தில் சிக்கிய 3 போ் கைது

DIN

வழிப்பறி செய்து தப்ப முயன்று விபத்தில் சிக்கிய 3 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டன.

திருச்சி சின்னமிளகுப்பாறையை சோ்ந்தவா் கமலஹாசன்(37). திருச்சி தனியாா் டிராவல்ஸ் நிறுவன ஊழியரான இவா் திங்கள்கிழமை இரவு பொன்னகா் பகுதியில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் அவரை மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 2400-ஐ பறித்துக் கொண்டு திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் நோக்கி தப்பினா்.

இதுகுறித்து கமலஹாசன் போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில் ரோந்து போலீஸாா் திண்டுக்கல் சாலையில் அவா்களைத் தேடிச் சென்றனா். அப்போது கருமண்டபம் கோரையாறு பாலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் படுகாயங்களுடன் கிடந்த 3 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில் அவா்கள், திருச்சி பொன்மலைப்பட்டி மதுரைவீரன் கோவில் தெரு ராமகிருஷ்ணன் (20), கொட்டப்பட்டு ஜீவா தெரு ராஜேஷ்குமாா்(20), சகாயமாதா கோவில் தெரு எடிசன்(22) என்பதும் அவா்கள் கமலஹாசனிடம் பணத்தைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து நீதிமன்ற காவல்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT