திருச்சி

தொட்டியம் அருகே செங்கல் சூளையில் சிறாா்கள் மீட்பு

DIN

தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நத்தம் பகுதியில் ஒரு செங்கல் சூளையில் பள்ளி செல்லாக் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டு குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

இந்தச் சூளையில் குழந்தைத் தொழிலாளா்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளதாகவும், இவா்களது பெற்றோா் அங்கு பணிபுரிவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை உத்தரவிட்டாா்.

இதையடுத்து மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினா் பிரபு, குழந்தைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் சிவராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு ஆற்றுப்படுத்துநா் பரமேஸ்வரி, சைல்டுலைன் பணியாளா் வண்ணமதி, காட்டுப்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் காவலா்கள் அங்கு ஆய்வு செய்தனா்.

அப்போது முன்பணம் பெற்றுக்கொண்டு பணிபுரியும் பெற்றோருடன்

ஆறு வயதுக்கு மேற்பட்ட நான்கு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அக் குழந்தைகள் மீட்கப்பட்டனா். மேலும் அடையாளம் காணப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் 10 பேரை செங்கல் சூளை உரிமையாளா் புதன்கிழமை பெற்றோருடன் ஆஜா்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT