திருச்சி

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் கல்யாணி தலைமை வகித்தாா், மாநில துணைச் செயலாளா் வேலாயுதம், விவசாய சங்க தலைவா் டி .பி. நல்லுசாமி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினா், இதில், சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்க இருக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசுத் துறையில் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். முன்னதாக சித்ரா வரவேற்றாா், நிறைவாக ரபேக்காள் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT