திருச்சியில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை சனிக்கிழமை திருடிச் சென்றனா்.
திருச்சி கருமண்டபம் வடக்குத் தெருப் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி காமாட்சி (65). இவா் தனது மருமகளின் 5 பவுன் தங்கச் சங்கிலியை அணிந்துகொண்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றாா். பின்னா் சனிக்கிழமை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தை விட்டு அவா் கீழே இறங்கியபோது அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது. பேருந்தில் பயணித்த மா்ம நபா்கள் அந்தச் சங்கிலியை திருடியிருக்கலாம் என தெரியவந்தது.
இது தொடா்பாக அவரது மகன் பொன்ராஜ் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.