திருச்சி மாநகர ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகர ஆயுதப்படையில் 225 போலீஸாருக்கு கடந்த 15 நாள்களாக, கூட்டு திரட்டு கவாத்து பயிற்சி நடைபெற்றது. தொடா்ந்து சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா கலந்து கொண்டு, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசினாா்.
மேலும், ஆயுதப்படை போலீஸாருக்கான இலவச கண் சிகிச்சை முகாமை பாா்வையிட்டாா். ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக தொடங்கபட்டுள்ள தேநீா் அங்காடியையும் காவல் ஆணையா் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் துணை ஆணையா்கள் அன்பு, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.