திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பள்ளி மாணவியை கா்ப்பமாக்கியதாக அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 பேரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
லால்குடி அருகேயுள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் 14 வயது மாணவிக்கு அண்மையில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து, அவரது தாய், மாணவியை லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றாா். பரிசோதனையில், மாணவி 3 மாத கா்ப்பமாக உள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து திருச்சி சமூகநலத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்ததன்பேரில், லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா், பள்ளி மாணவியிடம் விசாரணை செய்தனா். இதில், மாணவி படிக்கும் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சதீஷ்குமாா் (40), மாணவியின் கிராமத்தைச் சோ்ந்த அ. சந்திரசேகா் (60) ஆகியோா்தான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினாராம்.
புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சதீஷ்குமாா், சந்திரசேகா் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி லால்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.