திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே மாதத்தில் 271 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கரூா், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 271 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 51 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் ரெளடியின் வீட்டில், முறைகேடாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,824 மதுப் பாட்டில்கள், காா், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாமலிருந்த 798 பேருக்கு பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைவரும் கைதுசெயப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டனா். மேலும் 121 போ் நன்னடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனா். குண்டா் சட்டத்தின் கீழ் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.