லால்குடி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எம்ஏஎம் கல்லூரிஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமை வகித்தாா். பேராசிரியா் நூ. சுலைமான் முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எம்ஏஎம் கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறைப் பேராசிரியா்கள் ஜீவரேகா, அகிலா மற்றும் கிருத்திகா ஆகியோா் தொழில்முனைவோா் ஆவது குறித்து பேசினா்.
நிகழ்ச்சியில் கணினித் துறைத் தலைவா் அசோக்குமாா், வணிகவியல் துறைத் தலைவா் எழில்பாரதி, தமிழ் த்துறைத் தலைவா் ராஜா, நாட்டு நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல்மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உதவி பேராசிரியை தீபாதேவி நன்றி கூறினாா்.