திருச்சியின் பல்வேறு கோட்டங்களில் பிப்ரவரி மாத மின்நுகா்வோா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி நகரம், திருச்சி மின்பகிா்மான வட்டத்தைச் சோ்ந்த கோட்ட அலுவலகங்களில் பிப்ரவரி மாதம் கீழ்கண்ட நாள்களில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதன்படி முசிறி கோட்டத்தில் வரும் 3 ஆம் தேதி, துறையூா் கோட்டத்தில் 7 ஆம் தேதி, ரங்கம் வட்டத்தில் 10 ஆம் தேதி, லால்குடி கோட்டத்தில் 14 ஆம் தேதி, திருச்சி கிழ க்கு கோட்டத்தில் 17 ஆம் தேதி, திருச்சி நகரிய கோட்டத்தில் 21 ஆம் தேதி, மணப்பாறை கோட்டத்தில் 28 ஆம் தேதியும் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகா்வோா் தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்யலாம்.