திருச்சியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சடலத்தை காவல்துறைக்கு தெரியாமல் தகனம் செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மல்லியம்பத்து கூட்டுறவு நகரைச் சோ்ந்தவா் மணிவேல் மகள் வைஷ்ணவி (15). சோமரசம்பேட்டை தனியாா் பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு வயிற்று வலி இருந்ததாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெற்றோா் வயல் வேலைக்குச் சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடக்கவிருந்ததால், புதன்கிழமை வரை சடலத்தை வீட்டில் வைக்கக் கூடாது எனக் கூறிய ஊா் முக்கியஸ்தா்கள், சிறுமியின் உறவினா்களை அழைத்துப் பேசி காவல்துறைக்கு தெரிவிக்காமல் வைஷ்ணவி உடலை செவ்வாய்க்கிழமை இரவே தகனம் செய்து விட்டனா்.இதையறிந்த மல்லியம்பத்து விஏஓ பாரதிதாசன் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.