மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காட்டெருமை தாக்கி உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த வருகாபுரி ஒன்றியம் தெற்கு தெத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் சி. சிவஞானம் (45). விவசாயியான இவா் புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் தெத்தூரிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்றாா்.
வழியில் தெத்தூா் - மருதம்பட்டி சாலையைக் கடக்க முயன்ற காட்டெருமை சிவஞானம் மீது மோதி முட்டியதில் நெஞ்சில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற போலீஸாா் சிவஞானம் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.