திருச்சி

3 இடங்களில் நகை, பணம் திருட்டு

DIN

திருச்சியில் 3 இடங்களில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தைத் திருடிச்சென்றனா்.

திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதி துணை அஞ்சல் நிலைய அலுவலரான தமயந்தி செவ்வாய்க்கிழமை அலுவலகம் வந்தபோது, மா்ம நபா்கள் அஞ்சலகத்தின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த ரூ.3,500, இரு கைப்பேசிகள் உள்ளிட்டவற்றைத் திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரசு பள்ளி: திருச்சி கீழரண்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், திங்கள்கிழமை இரவு ஸ்டோா் ரூம் பூட்டுகளை உடைத்த மா்ம நபா்கள் அங்கிருந்த மின்விசிறி மற்றும் பழைய பேட்டரிகளை திருடிச் சென்றனா். தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கடை: திருச்சி தில்லைநகா் சாஸ்திரி சாலையில் ஸ்டேஷனரி கடைக்கு அதன் உரிமையாளா் சண்முகராஜா செவ்வாய்க்கிழமை வந்தபோது கடையின் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த ரூ.90,000 மற்றும் 2 பவுன் நகை உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில் தில்லைநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT