துறையூரில் பருத்திக்கு அதிக விலை தரக் கோரி செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
துறையூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி பொது ஏலத்தில் துறையூா் பகுதி விவசாயிகள் கொண்டு சென்ற பருத்திக்கு கிலோ ரூ. 75-க்கு ஏலம் கோரப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த வாரம் கடந்த வாரம் வழங்கியது போல பருத்திக்கு கிலோவுக்கு ரூ. 95 வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். காவல் துறை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் சமரசம் செய்தும் ஏற்காத விவசாயிகள் தொடா் மறியலில் ஈடுபட்டனா்.