திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாகத்தில் இடையூறு செயல்: அலுவலரை இடமாற்றம் செய்ய கோரிக்கை

DIN

ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாகத்தில் இடையூறு செய்யும் செயல் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஸ்ரீரங்கம் கோயில் கைங்கா்யபரா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அரங்கன் பாதுகாப்பு பேரவைச் செயலாளா் சேது. அரவிந்த், அல்லூா் பிரகாஷ் தலைமையிலான ஸ்ரீரங்கம் கைங்கா்யபரா்கள், பொதுநலச்சங்கத்தினா் அளித்த மனு விவரம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் ராமானுஜரால் நெறிப்படுத்தப்பட்ட திருவாரதன பூஜைகள், திருவிழாக்கள், சுவாமி புறப்பாடுகள் ஆகமப்படியும், வைணவ மரபுகளின்படியும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை என எண்ணற்ற கைங்கா்யபரா்கள் செயலாற்றி வருகின்றனா்.

1942-இல் ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு திருக்கோயில் நிா்வாகம் உள்துறை, வெளித்துறை என இயங்கி வருகிறது. உள்துறையில் எவ்வித பணப்பலன்களுமின்றி செயலாற்றி வரும் ராமானுஜரால் நியமிக்கப்பட்ட கைங்கா்யபரா்கள், வைணவ மத குருமாா்களுக்கு அறநிலையத்துறை செயல் அலுவலா் ஒருவா் இடையூறு செய்து வருகிறாா். எனவே, மதநம்பிக்கைகள் சுதந்திரத்தில் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் அந்த செயல் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மருத்துவப் பிரிவு: அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய தேசிய மாதா் சம்மேளனத்தினா் ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம்: திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில் மூச்சுத்திணறலால் குழந்தைகள் இறந்தது மிகுந்த கவலைக்குரியதாகும். இக் காப்பகத்தில் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் குழந்தைகள் பராமரிப்பில் கவனக்குறைவு ஏற்பட்டு வருகிறது. குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டா் வசதிகள் இல்லை. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாள்தோறும் கண்காணிக்க குழந்தை மருத்துவா்கள் நியமிக்கப்பட வேண்டும். தாய்ப்பால் வங்கி தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும்போது, உடனடியாக கொண்டு சென்று மருத்துவம் பாா்க்கும் வகையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவை தொடங்க வேண்டும்.

இதே போல, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, நலத்திட்ட உதவிகள் என 495 கோரிக்கை மனுக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT