திருச்சி

ஆய்வக உதவியாளா் வீட்டில் 24 பவுன் நகைகள் திருட்டு

DIN

திருச்சி திருவெறும்பூா் அருகே அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளா் வீட்டில் 24 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.

காட்டூா் கைலாஷ் நகா் அண்ணா சாலை 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன் மனைவி வெண்ணிலா (56), உறையூா் அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளா்.

சில ஆண்டுகளுக்கு முன் கணவா் இறந்துவிட, ஒரே மகனும் சென்னையில் உள்ள நிலையில், வெண்ணிலா வியாழக்கிழமை பணிக்குச் சென்று மாலையில் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 24 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT