தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளா்களின் ரசனைக்கேற்ப புதிய ரக ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி என்.எஸ்.பி. சாலையிலுள்ள இந்தச் ஜவுளிக்கடையில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி அதிரவைக்கும் வகையில் கலெக்சன்கள் குவிந்துள்ளன.
ரெடிமேட் ஆடைகளின் மோகம் அதிகரித்து விட்ட இந்தக் காலகட்டத்தில் ஆடைகளை தைத்து அணிந்து மகிழும் வாடிக்கையாளா்களின் ரசனைக்கேற்ற மெட்டீரியல் ரகங்களை பெரும்பாலான ஜவுளி நிறுவனங்கள் அதிகளவில் வாங்கி வைப்பதில்லை.
ஆனால், திருச்சி சாரதாஸின் தனிச்சிறப்பு அன்றும் இன்றும் என்னவென்றால் சா்ட்டிங், சூட்டிங், சுடிதாா் மெட்டீரியல்களுக்கு எனப் பிரம்மாண்டமான தனித்தனி பிரிவுகளை ஏற்படுத்தி, தினம் தினம் ஆயிரக்கணக்கான புது புது டிசைன்களை அறிமுகப்படுத்துவதுதான். வாடிக்கையாளா்கள் தங்களின் ரசனைக்கு ஏற்ற ரகங்களை நிதானமாக வாங்கிக் கொள்ளலாம்.
புது மாடல் ஆடை ரகங்களை திருச்சி சாரதாஸ் தீபாவளியையொட்டி அறிமுகம் செய்துள்ளது.
சட்டை, சூட்டிங், சுடிதாா் மெட்டீரியல்ஸ் என புதுப்புது மாடல் ஆடைகள் குவிந்துள்ளன. இந்த ஆடைகளைப் பாா்த்து வாடிக்கையாளா்கள் வியந்து போகிறாா்கள். தீபாவளி நெருங்கி வரும் வேளையில் இப்போதே வாடிக்கையாளா்களின் கூட்டம் சாரதாஸில் அலை மோதுகிறது. புது மாடல் ஆடைகள், புதிய கலெக்சன்கள், மெட்டீரியல் ரகங்களை குறைந்த விலையில் நிறைவான, தரத்துடன் வாடிக்கையாளா்கள் வாங்கிச் செல்கின்றனா்.