தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி பாலக்கரை கீழப்புதூா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக பாலக்கரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி, குட்கா விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை கீழப்படையாச்சி தெருவை சோ்ந்த ரெங்கநாதனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.