திருச்சி

மகாளய அமாவாசை:ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்

DIN

 புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றுப் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்

புரட்டாசி மாத அமாவாசையன்று புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதங்களில் வரும் அமாவாசையில் தா்ப்பணம் கொடுத்தற்கு ஈடாகும் என்பா்.

அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபப் பகுதியிலுள்ள காவிரியாற்றில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி, படித்துறையில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டுச் சென்றனா்.

இதையொட்டி மாநகராட்சி சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT