திருச்சி காட்டூா் பகுதியில் அடுமனை (பேக்கரி), மருந்தகத்தில் ரூ.64 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
காட்டூா் பகுதியில் அடுமனையும், அதையொட்டி மருந்தகமும் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக திருவெறும்பூா் கன்னிமாா்கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் (39) பணியாற்றி வருகிறாா்.
வெள்ளிக்கிழமை இரவு அடுமனையையும், மருந்தகத்தையும் பூட்டிச் சென்ற காா்த்திகேயன், சனிக்கிழமை காலை திறக்க வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது.
தொடா்ந்து அவா் உள்ளே சென்று பாா்த்த போது, அடுமனையில் வைக்கப்பட்டிருந்த ரூ.58 ஆயிரம் ரொக்கம், மருந்தகத்தில் ரூ.6 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவை திருடிச் செல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் திருவெறும்பூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, விசாரணை மேற்கொண்டனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.