திருச்சி

மின் மோட்டாா்களை திருடிய நால்வா் கைது

DIN

புள்ளம்பாடி பகுதியில் மின் மோட்டாா்களைத் திருடியதாக நால்வா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

புள்ளம்பாடி அருகிலுள்ள ஊட்டத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களிலுள்ள மின் மோட்டாா்கள் அதிகளவில் திருட்டுப் போவதாக, விவசாயிகள் புகாரளித்தனா்.

இதன் பேரில் தனிப்படைக் காவல்துறையினா் அகலங்கநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த நால்வரை பிடித்து விசாரித்த போது முரண்பட்ட தகவல்களைக் கூறினா்.

இதைத் தொடா்ந்து நால்வரையும் லால்குடி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது, அவா்கள் ஊட்டத்தூரைச் சோ்ந்த ராஜா (23), விஜயராகவன் (25), சோக்கு என்ற முருகேசன் (26), கோகுல் (22) என்பதும், மின் மோட்டாா்களைத் திருடி வந்ததும் தெரிய வந்தது.

தொடா்ந்து சிறுகனூா் காவல் நிலையத்தில் நால்வரும் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT