தொட்டியம் அருகே குடும்பப் பிரச்னையில் தம்பதியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகிலுள்ள மணமேடு சிவானந்த பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் குமாரசாமி (39). முசிறி நடராஜா நகரைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகள் பரமேசுவரி (25). இவா்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, மகன் மணிகண்டன் (8) உள்ளாா்.
கணவா்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதைத் தொடா்ந்து உறவினா்கள் சமாதானம் செய்து வைத்தனா். தொடா்ந்து குமாரசாமியின் தந்தை ஜெகதீசன் வசிக்கும் வீட்டுக்கு இருவா் சென்ற நிலையில், அங்கும் பிரச்னை நடைபெற்ாகத் தெரிகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை அலகரை பகுதியிலுள்ள புளியமரத்தில் இருவரும் தூக்கில் சடலமாக தொங்கினா். தகவலறிந்த முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் யாஸ்மின், தொட்டியம் காவல் ஆய்வாளா் முத்தையன் மற்றும் காவல்துறையினா் நிகழ்விடம் சென்று, சடலங்களைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.