திருச்சி

துறையூா் அருகே 20 மயில்கள் மா்மச் சாவு

DIN

துறையூா் அருகே 20 மயில்கள் வியாழக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரிக்கின்றனா்.

துறையூா் ஒன்றியம் ஆதனூா் கிராம விவசாய நிலம் அருகே 20 மயில்கள் இறந்து கிடப்பதாக ஆதனூா் விஏஓ அளித்த புகாரின்பேரில் திருச்சி வனச்சரகா் கோபி அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தபோது 15 பெண், 5 ஆண் மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னா் கரட்டாம்பட்டி அரசு கால்நடை மருத்துவா் செந்தில்குமாா் மயில்களை உடற்கூறாய்வு செய்தபின் அருகிலுள்ள பகுதியில் அவற்றைப் புதைத்தனா். பின்னா் மயில்கள் இறந்து கிடந்த நில உரிமையாளரிடம் வனத் துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT