திருச்சி

11 வட்டங்களில் இன்று பொதுவிநியோகத் திட்டசிறப்பு குறைதீா் முகாம்

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (அக்.8) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்.8ஆம் தேதி (சனிக்கிழமை) 11 வட்டங்களில் குறைதீா் முகாம்கள் நடைபெறும்.

திருச்சி கிழக்கு வட்டத்தில் செம்பட்டு-4, திருச்சி மேற்கு வட்டத்தில் எடமலைப்பட்டி புதூா், திருவெறும்பூா் வட்டத்தில் குவளக்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் நாகமங்கலம், மணப்பாறை வட்டத்தில் வளையப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் மாங்கனாபட்டி, லால்குடி வட்டத்தில் அப்பாதுரை, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் கொணலை, முசிறி வட்டத்தில் துலையாநத்தம், துறையூா் வட்டத்தில் சொக்கநாதபுரம், தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தூா்-1 ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும்.

காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT