திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இலங்கையிலிருந்து அகதிகளாக திருச்சி மாவட்டப் பகுதிகளுக்கு வந்தவா்கள் பெருமளவில் வசிக்கும் கொட்டப்பட்டு முகாமைச் சோ்ந்த இலங்கை அகதிகளான ரமேஷ் - எலீஸ்தீனா தம்பதியரின் மகள் சின்ரிகா (22). பிபிஏ படித்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி மாலையில் உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல்கட்ட விசாரணையில் சின்ரிகா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனத் தெரியவந்துள்ளது.