விஜயதசமியை முன்னிட்டு திருச்சி சந்தானம் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் புதன்கிழமை சரஸ்வதி தேவி பூஜையுடன் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
நிகழ்வில் பெற்றோா் கலந்து கொண்டு, தங்களது குழந்தைகளை நெல்லில் ஓம் என வித்யாரம்பம் எழுத வைத்து, பள்ளியில் சோ்த்தனா். பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குநா் அபா்ணா, முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.